Skip to main content

ஒய்யார மயில்

 கலப்பின(ண )ங்கள் 


எந்த காலகட்டத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது போல மாற்றம் அனைத்திலும் உண்டு: நம் சேவல்களில் அதிகம் உண்டு 

இந்த மாற்றத்திர்கான தேடல் நம் நாட்டு இனங்களின் அழிவு, எதற்கு இந்த தேடல் ஆசையே அனைத்துக்கும் காரணம். நம் சேவல்களில் பல இனங்கள் உண்டு அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப்பண்பை பெற்றிருக்கும் இத்தகைய பண்புகள் கலப்பினங்களால் அழிந்துவிடுகின்றது.

உதாரணமாக ஆந்திர மாநில சேவல்களின் கிளி மற்றும் குட்டை மூக்கு நம் இனங்களுக்கும இல்லை இவை நம்முடன் கலப்பினம் செய்யப்படும்போது உயரத்தை இழந்துவிடுகிறது மேலும் குஞ்சு பொரிக்கும் தன்மையும் குறைகிறது. சேவல்கள் இயற்கையாகவே 12 முதல் 15 குஞ்சுகள் வரை பொரிக்கும் தன்மை கொண்டது, ஆனால்  தற்போது 4 இல்லை 5. மேலும் நம் இனங்கள் நம் சூழலுக்கும் ஏற்ப தகவமைப்பை கொண்டவை கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் வாழும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது கட்டுத்தரையில் காற்றாடியும், மழைக்கு மருந்து டானிக்கும் தான் தேவையாக இருக்கிறது.

நம் இனங்களில் உள்ள பெருவெட்டு நமக்கே உரித்தான ஒன்று அது எந்த மாநில சேவல்களுக்கும் இல்லை, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பெருவெட்டு இனங்களே அழிந்துவிட்டது. இது மட்டும் அல்ல நம் சேவல்களின் வண்ணங்களும் நமக்கவே உரித்தானவை ஆனால் தற்போது மயில் என்ற ஒரு நிறத்தை வைத்தே மார்கெட்டும் நகர்கிறது. 

மனிதர்களில் எப்பிடி பல நிறங்கள் உண்டோ அதே போல் தான் சேவல்களிலும், எனக்கு சிவப்பு குழந்தை தான் வேண்டும் என்றால் மற்ற பிள்ளைகள் பிறக்குமா இல்லை, கருப்பு நிறத்தவருக்கு கல்யாணம் தான் நடக்குமா இது ஒரு வன்கொடுமை போன்று. இதே போல் தான் மயில் நிறத்தில் உள்ளது தான்  சேவல்கள் என்றும் மற்றவையை காக்கைகள் போல பார்க்கும் மனப்பான்மை வந்துவிட்டது, இது ஒரு இன  அழிவுக்கான முன் படி.

சாம்பல் பூதி நிற சேவல் 


கருஞ்செவளை நிற சேவல் 


இன்னும் பின்னால் வரும் 2 தலைமுறைக்கும் பின் நம் சேவல்களில் நிறங்களே  தெரியலாம் போய்விடும், எத்தனை  நிறங்களை நாம் பார்த்திருப்போம் கருஞ்செவலை, காகம், பூதி, மரபூதி, மயில்பூதி, வெள்ளை, அழுக்கு வெள்ளை, செவலை, வெளுப்பு செவலை, கீரி, கருங்கீரி, வெளுப்பு கீரி, புள்ளி சேவல், நூலான், வெளுப்பு நூலான், மயில் நூலான், மயிலு, வெளுப்புமயிலு, நெஞ்சு கருப்பு, எண்ணெய் கருப்பு, வெள்ளிக்காலு, பச்சகாலு, கருங்காலு என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் மயில்நிறத்தை மட்டும் தலையில் வைத்துக்கொண்டு மற்ற நிறங்களை அழித்துக்கொண்டிருக்கின்றோம். 

ஒவ்வொரு சேவல்களின் நிறம் அதன் பண்பை பொறுத்தே அமையும், உதாரணமாக செவலை நிற சேவல்கள் மூர்க்கத்தனமான கோவம்  கொண்டவை, வெளுப்பு நூலான் நன்கு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை, ஆனால் குஞ்சுகளின் நிறங்களுக்காக நாம் அவற்றை கோழிக்கு போடுவதில்லை. இவ்வாறே இந்த நிற சேவல் இனங்கள் அழிந்துகொண்டே வருகிறது. ஒரு நிறத்திக்காக ஒரு இனத்தையே அழிப்பது நாமாக இருக்க வேண்டாமே.

அறியாமையை ஒழித்து அனைத்து நிற சேவல்களையும் வாழ வழிகொடுப்போம் மேலும் கலப்பினங்களை தவிர்த்து நம் இனங்களை நாளைய தலைமுறைகொண்டுசெல்வோம்.

Comments

Popular posts from this blog

கருப்பு வெள்ளை

கருஞ்சதை சேவல் கோழி   கருஞ்சதை சேவல்கள் உயரமாகவும், பெருவெட்டாகவும், கால்  கருப்பாகவும், சதை கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். இதன் பூர்வீகம் சேலம் மாவட்டம் சங்ககிரி.  இந்த வகை சேவல், கோழிகள் சண்டைக்காகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய எடை சேவல்கள் சுமார் நான்கு முதல் எட்டு கிலோ வரையிலும், கோழிகள் சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ வரையிலும் இருக்கும். இந்த வகை சேவல்கள் சண்டைக்கு மிகவும் சிறப்பானவை காரணம் இதன் கருப்பு நிறம் தான். பொதுவாகவே கருப்பு நிறம் வீரியத்தை குறிக்கும், அதிக தாங்குதிறன், அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. இயற்கையாகவே சேவல்களில் இறக்கையில் பலவகை நிறங்கள் இருக்கும் (மூன்று முதல் ஐந்து வரை நிறங்கள்), நிறங்களை உருவாகுவது நிறமிகள் (Pigment). இவ்வகை நிறமிகளின் குறைபாட்டினால் தான் (pigmentation disorder) தூய வெள்ளை நிறத்தில் சேவல், கோழிகள் பிறக்கின்றன. கருஞ்சதை கோழி  கருஞ்சதை சேவல்  உதாரணமாக தூய வெள்ளை நிற ராஜபாளைய நாய்களில் செவிடு மட்டும் கண் குறைபாடு வரும், இதேபோல் குருவி இனங்களில் அல்பினோ வெள்ளை நிற குருவிகளுக்கு நோ

கொக்கரக்கோ கோழி

கோழி கூவுது "சோழ மன்னர்களின் தலைநகரமான உறையூரைக் ' கோழியூர்'  என்று கூறுவர். இதற்கு காரணம் சோழனின் பட்டது யானையை கோழி ஒன்று எதிர்த்ததாம். யானையை எதிர்க்கும் அளவு கோழிக்கு வீரம் விளைவித்த அந்த மண்ணை தலைநகராக்கி ' கோழியூர்'  என்று பெயர் சூட்டினார்களாம் பெரும்பாலும் நாம் சேவல்களுக்கு குடுக்கும் முக்கியத்துவம் கோழிகளுக்கு கொடுப்பதில்லை. பண்டைய காலத்தில சேவல், கோழி என்று பிரித்து கூறமாட்டார்கள், அனைத்தும் ' கோழிகள்' தான். இன்னும் கூட கோழி கூவுது என்று தான் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. சேவல்களையும் கோழி என்று தான் பண்டைய காலத்தில் கூறுவர். சேவல்களின் உருவம், அழகில் கோழிகள் கொஞ்சம் குறைவு தான் அதனால் தான் என்னவோ மக்கள் கோழிகளை பெருதும் பொருட்படுத்துவது இல்லை, மற்றும் இதன் விலையோ சேவல்களை விட குறைவு. ஒரு நல்ல குஞ்சுகளை உருவாக்குவதில் சேவல்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதே அளவு கோழிகளுக்கும் உண்டு. மேலும் குஞ்சு பொரிக்கும் திறன் கோழிகளின் வீரியத்தை பொறுத்ததே அமையும். பூதி நிற வால் வெடைக்கோழி (Old lineage) மயில் பூதி நிற கோழி  (Old lin